2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் 21 பேர் படுகாயம்

மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி 60 பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டுச் பிற்பகல் 12.30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தை ஓட்டுநர் முருகன்(39) ஓட்டினாராம். விருதுநகர் அடுத்த

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:11 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பழுதாகி நின்றிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட 21 பேர் செவ்வாய்கிழமை படுகாயம் அடைந்தனர்.

மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி 60 பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டுச் பிற்பகல் 12.30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தை ஓட்டுநர் முருகன்(39) ஓட்டினாராம். விருதுநகர் அடுத்த உசிலம்பட்டி அருகே திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பழுதாகி நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில், முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்த 20 பேர் வரையில் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களின் பெயர் விவரம்: மானாமதுரையைச் சேர்ந்த செல்வராஜ்(52), தஞ்சாவூர் சக்திவேல்(48), மதுரை முத்துக்கிருஷ்ணன்(52), ஓசூர் பாலாஜியின் மகள் திவ்யா(16), அவரது மனைவி காய்த்ரி(44), கன்னியாகுமரி  ஜெபரீஷ்(73), சாத்தூர் பச்சைமலை மகன் முத்துராஜ்(30), கன்னியாகுமரி பாலசுந்தரின் மகன் ஆஸ்டின் பிரிட்டோ(9), மதுரையைச் சேர்ந்த வெங்கட் மனைவி ஜெயராணி(40), பாளையங்கோட்டை ஜேசு(67), நிலக்கோட்டை சுந்தரபாண்டியின் மனைவி மீனா(28), நாகர்கோவில் கோவிந்தனின் மகன் சுப்புராஜ்(44), கோவில்பட்டி மகாலிங்கம் மகன் சாமி(30), கல்லல் சங்கரம்மாள்(40), அதே பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன் மகன் கிருஷ்ணன்(45), ருக்மணி(44), காளிராஜ்(38), ரெஜினா(36), சென்பகம்(40), ராஜம்மாள்(14) மற்றும் ஓட்டுநர் முருகன்(39) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாண்டியன் நகர் போலீஸார் உடனே விரைந்து வந்தனர். பின்னர் காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓசூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் காய்த்ரி, மகள் திவ்யா, கல்லல் பகுதியைச் சேர்ந்த சங்கரம்மாள், கிருஷ்ணன் ஆகியோரை மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.