திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டப்பேரவை, தொல்காப்பிய பூங்கா, செம்மொழி பூங்கா, அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவை அதிமுக ஆட்சியில் மூடப்பட்டன. அதிமுகவும், பாஜகவும் கொள்கை அளவில் வேறுபடவில்லை. இசுலாமியர்களுக்கு மு. கருணாநிதி வழங்கிய மூனறை சதவீத இடஒதுக்கீட்டை தான் வழங்கியதாக பொய் கூறி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. மேலும் இந்திய யூனியன் முஸ்லீம்லீக் அதிமுக கூட்டணியில் இருப்பதாகவும் பொய் கூறி வருகிறார். இதை அவர் கைவிட வேண்டும். இல்லையேல் அவர் செல்லுமிடத்தில் எல்லாம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் தமிழக முதல்வருக்கு கருப்பு கொடி காட்டுவோம்.