/

ஆழ்வார்திருநகரி அருகே தந்தை மகன் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மழவராயநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நங்கமுத்து 68 இவர் மகன் பொன் இசக்கி 45  இருவரும் இன்று டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:48 am

கவிதன்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மழவராயநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நங்கமுத்து 68 இவர் மகன் பொன் இசக்கி 45  இருவரும் இன்று டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்

அப்போது இருவர் பைக்கில் வந்தனர். ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்தார்

இருவரும் சேர்ந்து நங்கமுத்துவையும் பொன் இசக்கியையும் வெட்டினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பொன் இசக்கியின் மனைவி நம்பிக்கண்ணுவை சில மாதங்களுக்கு முன்னர் பொன் இசக்கி வெட்டியுள்ளார். இதில், கைதாகி சிறையில் இருந்த அவர், சில நாள்களுக்கு முன்னர்தான் ஜாமீனில் வெளிவந்திருந்தார்.

அந்த அடிப்படையில் அவரது மனைவியின் தம்பிகள் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், டிஎஸ்பி கனகராஜ் ஆகியோர் விசாரணை நடத்துகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.