/

காரில் கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரசி பறிமுதல்

மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், குமரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, பணியாளர்கள் ஜான்பிரைட், விஜயகுமார் உள்ளிட்டோர் சனிக்கிழமை புதுக்கடை அருகே

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:43 am

சி. சுரேஷ்குமார்

நித்திரவிளை அருகே கேரளத்துக்கு காரில் கடத்த முயன்ற 750 கிலோ ரேஷன் அரிசியை மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், குமரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, பணியாளர்கள் ஜான்பிரைட், விஜயகுமார் உள்ளிட்டோர் சனிக்கிழமை புதுக்கடை அருகே வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிரில் வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். கார் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்தினர். தொடர்ந்து காரை மங்காடு பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து காரை சோதனையிட்டபோது, அதில் 750 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. டிரைவர் தப்பியோடிவிட்டார். காரையும், ரேஷன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.