பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

ஆடுகளை திருட முயன்ற 4 பேர் கைது

விருதுநகர் அருகே பாண்டியன் நகர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் டேவிட்குமார்(30). இவர் வீடு அருகே பலசரக்கு கடை நடத்தி வருகிறார். அதற்கருகே உள்ள கொட்டகையில் 5 ஆடுகளையும் வளர்த்து வருகிறார்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:41 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பலசரக்கு வியாபாரி வீட்டில் ஆடுகளை திருட முயன்ற 4 பேர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விருதுநகர் அருகே பாண்டியன் நகர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் டேவிட்குமார்(30). இவர் வீடு அருகே பலசரக்கு கடை நடத்தி வருகிறார். அதற்கருகே உள்ள கொட்டகையில் 5 ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு வழக்கம் போல் கடைகளை அடைத்து விட்டு வீட்டிற்குள் தூங்க சென்றாராம். அதையடுத்து, நள்ளிரவில் திடீரென ஆடுகள் கதறியுள்ளன. இதையடுத்து தூக்கத்தில் இருந்து எழுந்து கொட்டைகைக்கு வந்து பார்த்தாராம். அப்போது, 4 பேர் ஆடுகளின் கயிறை அறுத்து திருட முயற்சித்து கொண்டிருந்தனர். இதையடுத்து உடனே சத்தம் போட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்களை அழைத்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு திருட வந்தவர்கள் தப்பியோட முயற்சிக்கும் போது சுற்றி வளைத்து பொதுமக்கள் பிடித்தனர்.

பின்னர் அருகில் உள்ள பாண்டியன் நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று 4 பேரையும் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை செய்ததில்   சொக்கலிங்கம்பட்டி மகாலிங்கம்(34), மதுரை அச்சம் பத்து பகுதியைச் சேர்ந்த முத்துசாமி(30), பாண்டியன் நகர் அய்யனார்(35) மற்றும் விருதுநகரைச் சேர்ந்த மணிகண்டன்(29) என்கிற விவரம் தெரியவந்தது. ஆடுகளை திருட முயற்சி செய்த 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.