பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

இளைஞரை தாக்கி காயப்படுத்திய ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது

விருதுநகர் அருகே புல்லலக்க்கோட்டை கிராமம். இங்கு ஏற்கனவே இரு பிரிவினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் முத்துச்சாமி என்பவரின் மகன் சரவணக்குமார்(22). இவர் இப்பகுதியில்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:37 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவரை தாக்கி காயப்படுத்திய ராணுவ வீரர் உள்பட இரண்டு பேரை பாண்டியன் நகர் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே புல்லலக்க்கோட்டை கிராமம். இங்கு ஏற்கனவே இரு பிரிவினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் முத்துச்சாமி என்பவரின் மகன் சரவணக்குமார்(22). இவர் இப்பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை விருதுநகரில் பொருள்கள் வாங்கிக் கொண்டு புல்லலக்கோட்டைக்கு அவரது தோட்டத்திற்கு சென்றாராம். அப்போது, ஏற்கனவே உள்ள முன்விரோதத்தை மனதில் வைத்து இதே ஊரைச் சேர்ந்த நடுத்தெருவைச் சேர்ந்த ராணுவ வீரரான மாரியப்பயன்(32), குப்புசாமி உள்ளிடட 10 பேர் வழிமறித்து கத்தி, அரிவாள் மற்றும் கம்பாலும் தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த நிலையில் அலறல் சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் திரண்டு வருவதைப் பார்த்தவுடன் ராணுவ வீரர் தரப்பினர் தப்பியோடிவிட்டனர். இதில், மாணவர் பலத்த காயம் அடைந்தார்.

இது குறித்து விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் மாணவர் சரவணக்குமார் அளித்த புகாரின் பேரில் ராணுவவீரர் மாரியப்பன், ஆறுமுகம் ஆகியோரை போலீஸார் கைது செய்தும், 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதேபோல், ராணுவ வீரர் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சரவணக்குமார், பால்சாமி மற்றும் ராஜேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தை அடுத்து மேலும் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீஸார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.