விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2001 முதல் 2014 வரையில் எச்.ஐ.வியால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 4964 பேர் ஆவார்கள். இதில், தொடர் சிகிச்சை மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை பெறுவதற்காக 3845 பேர் பதிவு செய்திருந்தனர். இம்மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனை, வட்டார தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்களில் எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், இப்பணியை மேற்கொள்வதற்கு நம்பிக்கை மையம், கவுன்சிலர்கள் மற்றும் தொழில் நுட்ப பணியாளர்களும் உள்ளனர். இதனால் கர்ப்பிணி பெண்கள் முதல் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்கின்றனர். அதேபோல், எய்ட்ஸ் தொடர்பாக சுகாதாரத்துறை மூலம் பிராசார விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.