பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

விருதுநகர் அருகே அனுமதியின்றி கருந்திரி தயாரித்த 4 பேர் கைது

விருதுநகர் அருகே உள்ளது டி.சேடபட்டி கிராமம். இங்கு அரசு அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கருந்திரிகளை வீடுகளில் வைத்து தயாரிப்பதாக வச்சக்காரப்பட்டி

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:32 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அனுமதியின்றி வீடுகளில் கருந்திரிகளை தயாரித்த 4 பேரை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே உள்ளது டி.சேடபட்டி கிராமம். இங்கு அரசு அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கருந்திரிகளை வீடுகளில் வைத்து தயாரிப்பதாக வச்சக்காரப்பட்டி போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன் அடிப்படையில் குறிப்பிட்ட கிராமத்தில் சனிக்கிழமை மாலையில் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கருந்திரி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பரமசிவம்(40) என்பவரை பிடித்தனர். இதேபோல், இக்கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி(47), ராஜாக்கனி(46), போஸ்(51) ஆகியோரும் கருந்திரி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். உடனே இவர்கள் 4 பேரையும் வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

அதோடு, தாயராக வைத்திருந்த 102 கருந்திரி கட்டுக்கள் மற்றும் பசை பொருள்கள் ஆகியவைகளையும் பறிமுதல் செய்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.