இந்த மாநாட்டில் பெண்கள் அரசு அலுவலங்களில் இரவு 8 மணிவரையில் பணி செய்து விட்டுச் சென்றால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுவதால், அரசு துறையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.பணிபுரியும் அலுவலகங்களில் அலுவலர்களால் பாலியல் சீண்டல்கள் ஏற்படுவதை, தடுக்கவும் இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காணவும் மாநில, மாவட்ட அளவில் விசாரணை குழு அமைக்க வேண்டும்.அலுவலகங்களில் பெண் பணியாளர்களுக்கு தனியாக கழிப்பறை வசதியுடன் ஓய்வறை அமைத்தல் மற்றும் சட்டப்பேரவை, மக்களவை மற்றும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.