தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பெண்களிடையே தரக்குறைவாக நடந்து கொள்ளும் ராணுவ அதிகாரி மீது புகார்

விருதுநகர் அருகே கண்டபடி பேசி, பெண்கள் முன்னிலையில் தரக்குறைவாக நடந்து கொள்ளும் ராணுவ அதிகாரி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:30 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கண்டபடி பேசி, பெண்கள் முன்னிலையில் தரக்குறைவாக நடந்து கொள்ளும் ராணுவ அதிகாரி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.

இது குறித்து கிருஷ்ணப்பநாயக்கன்பட்டி கிராம மக்களின் சார்பில் நாட்டாமை  சுநதராஜன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் அருகே செவலூர் ஊராட்சியைச் சேர்ந்த கிருஷ்ணப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 1000-த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதே கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டி என்பவரின் மகன் முத்துமாரியப்பன்(25). இவர் கடந்த 4 வருடங்களாக ராணுவ வீரராக பணியாற்றி வருகிறாராம். இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். இவர்  மாலை நேரங்களில் மதுக்குடித்து விட்டு தெருக்களில் போகிறவர்களை தகாத முறையில் பேசுவராம். அதோடு, பெண்கள் நடமாடும் போது தரக்குறைவாகவும் நடந்து கொள்கிறார். இதனால் இவர் இருக்கும் நேரத்தில் பெண்கள் அப்பகுதியில் நடமாடமுடியாத நிலை உள்ளது. கிராம மக்களின் வேண்டுகோளின் படி உறவின் முறை கூட்டத்திற்கு அழைத்துள்ளனர். அந்தக் கூட்டத்திலும் கட்டுப்படவில்லை. அதையடுத்து தாய், தந்தையர் மன்னிப்பு கேட்கும் படி கூறியுள்ளனர். இதையடுத்து இருவரையும் கிராம மக்கள் முன்னிலையே அடித்து உதைத்ததோடு, உங்களுக்கு இதுதான் கதி என்கிறார். ராணுவத்தில் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் கிராம மக்களும் பொறுமையோடு இருந்தனர். இதேபோல், ஒவ்வொரு முறையும் விடுமுறைக்கு வரும் போதும் இதே செயலைச் செய்து வருகிறார்.

இது தொடர்பாக எம்.புதுப்பட்டி காவல் நிலையத்திலும் புகார் செய்தோம். அங்கு மனு ரசீது கொடுத்து விசாரிக்காமலே அனுப்பி வைத்தனர். எனவே பெண்களை தரக்குறைவாக பேசும் ராணுவ வீரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  நாட்டம்மை சுந்தர்ராஜன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்எஸ்.மகேஸ்வரனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், இகு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக  எஸ்.பி.தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.