தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அருப்புக்கோட்டை அருகே கருந்திரி கடத்தியதாக 2 பேர் கைது

அருப்புக்கோட்டை அருகே பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை ஆட்டோவில் கடத்திச் சென்றதாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஆட்டோவில் இறங்கும் போது

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:29 am

எஸ். பாண்டியன்

அருப்புக்கோட்டை அருகே பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை ஆட்டோவில் கடத்திச் சென்றதாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஆட்டோவில் இறங்கும் போது தப்பியோடியவர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் பகுதிக்கு கன்னிசேரிபுதூர் பகுதியிலிருந்து வாகனங்களில் பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்களை கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீஸார் சுக்கிலநத்தம்-வெள்ளையாபுரம் சாலையில் தீவிர ரோந்து சென்றனர்.

அப்போது, அவ்வழியாக வண்டிப்பாதையில் வந்த ஆட்டோவை வழிமறித்து பின்புறம் சோதனையிட்டனர். அதில், அனுமதியில்லாமல் கருந்திரி கட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. உடனே ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை செய்வதற்கு முன்புறம் பகுதிக்கு வந்த போது ஒருவர் சோளக்காட்டிற்குள் தப்பியோடினார். அதையடுத்து மற்ற இரண்டு பேர்களையும் பிடித்து விசாரணை செய்த போது சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன்(55), அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான பாலசுப்பிரமணி(35) மற்றும் தப்பியோடியவர் சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த ரத்தினகுமார் என்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக வேல்முருகன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ரத்தினகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் அதிலிருந்த 900 கருந்திரி கட்டுக்கள் ஆகியவைகளை போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.