தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அனுமதியின்றி மினி லாரியில் கருந்திரி கடத்திய 3 பேர் கைது: 20 கருந்திரி மூட்டைகள் பறிமுதல்

விருதுநகர் அருகே அனுமதியின்றி மினி லாரியில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை கடத்தியதாக 3 பேரை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர். அதோடு மினி லாரியையும், அதில்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:29 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அனுமதியின்றி மினி லாரியில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை கடத்தியதாக 3 பேரை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர். அதோடு மினி லாரியையும், அதில் இருந்த 20 மூட்டை கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

விருதுநகர் அருகே மன்னார்கோட்டை வழியாக தாயில்பட்டிக்கு மினி வாகனங்களில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்கள் மற்றும் அதற்கு பயன்படும் உற்பத்தி பொருள்கள் ஆகியவைகளை கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தர்மர் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக மினிலாரி வந்து கொண்டிருந்த போது உள்ளேயிருந்தவர்கள் போலீஸார் நிற்பதை பார்த்து வாகனத்தை திருப்பி தப்பிக்க முயற்சித்தனர். உடனே சுற்றி வளைத்து போலீஸார் பிடித்தனர்.

பின்னர் லாரியில் சோதனையிட்ட போது கருந்திரி கட்டுக்கள் அடங்கிய சாக்கு மூட்டைகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் உற்பத்தி பொருள்கள் ஆகியவைகள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரித்த போது தாயில்பட்டியைச் சேர்ந்த பட்டாசு தொழில் ஒப்பந்தகாரர் கந்தசாமி(65), மினிவேன் கிளீனர் நாராயணன்(55), டிரைவர் கோபால்சாமி(50) என்கிற விவரம் தெரிய வந்தது. அதோடு, சாத்தூர் வெங்கடாஜலபுரம் வழியாக தாயில்பட்டிக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். அதோடு, மினி லாரியையும், அதில் கடத்திச் சென்ற கருந்திரி கட்டுக்கள் அடங்கிய 20 ஆகியவைகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு போலீஸார் கொண்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.