அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகரில் புக்கிங் அலுவலகத்திற்கு முன்பு நின்றிருந்த லாரி மாயம்

விருதுநகர் அருகே மூளிப்பட்டியைச் சேர்ந்த மைக்கேல் என்பவரின் மகன் ஆரோக்கியராஜ்(26). இவர் இங்குள்ள தனியார் ஏஜென்சியில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை இரவு

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:01 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் ஏஜென்சி புக்கிங் அலுவலகம் முன்புசரக்கு ஏற்றுவதற்காக நிறுத்தியிருந்த லாரியை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

விருதுநகர் அருகே மூளிப்பட்டியைச் சேர்ந்த மைக்கேல் என்பவரின் மகன் ஆரோக்கியராஜ்(26). இவர் இங்குள்ள தனியார் ஏஜென்சியில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை இரவு விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள புக்கிங் அலுவலகத்திற்கு சரக்கு ஏற்றுவதற்காக லாரியை கொண்டு வந்து சாலையோரம் நிறுத்தியுள்ளார். அப்படியே இரவு உணவுக்காக ஓட்டல் சென்று விட்டு அப்பகுதியில் உள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாராம். பின்னர் திரும்பி வந்து பார்க்கும் போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும், அப்பகுதியில் ஓட்டுநர்களிடம் லாரி குறித்து விசாரித்தில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த லாரியின் மதிப்பு ரூ.3 லட்சம் மதிப்புடையது ஆகும். உடனே இது குறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஆரோக்கியராஜ் புகார் செய்தார். அதன் பேரில் ஏஜென்சியின் முன்பு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.