அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை இணைத்து கழகமாக உருவாக்க வேண்டும்: ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

மதுரை மண்டல பொது காப்பீட்டுத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் விருதுநகர் மாவட்ட குழுக் கூட்டம் அச்சங்க வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் காளிதாசன்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:01 am

எஸ். பாண்டியன்

அரசின் 4 பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைத்து கழகமாக உருவாக்க வேண்டும் என பொது காப்பீட்டு துறை ஊழியர்கள் சங்க மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மண்டல பொது காப்பீட்டுத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் விருதுநகர் மாவட்ட குழுக் கூட்டம் அச்சங்க வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் காளிதாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜவஹர் குழு அறிக்கை சமர்பித்தார். இதில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் தலைவித்தாடும் தீண்டாமை கொடுமைகளுக்கு மாவட்ட நிர்வாகம்  உரிய முறையில் தீர்வு காணப்பட வேண்டும்.

அரசின் பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைத்து ஒரே கழகமாக உருவாக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக மழையில்லாமல் இருக்கும் இம்மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் மகாலட்சுமி, மதுரை மண்டல பொது காப்பீட்டுத்துறை ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்று வாழத்துரை வழங்கினார்கள். இதில் மண்டல இணைச்செயலாளர் நிறைவுறையாற்றினார். மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நன்றிவுரை கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாவட்ட, வட்டார கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.