திருச்சியில் இருந்து கரூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலைத்தான் கரூரில் உள்ள டெக்ஸ் நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பேருந்துக்கு கூண்டு கட்டுதல் போன்ற தொழிóல்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் இரவு நேரத்தில் கரூர் ரயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு பின்னர் அதிகாலை 6.50 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ரயிலை 6.50 மணிக்கு ஊழியர்கள் இயக்க முயன்ற போது, ரயில் இன்ஜினில் உள்ள வால்வு பழுதடைந்து பிரேக்கும் பழுதானது தெரிய வந்தது.