ஆடி 18ஐ முன்னிட்டு திறக்கப்படும் தண்ணீர் விநாடிக்கு 2000 முதல் 3,000 கன அடிவரை நீர் விட்டால் மாயனூர் கட்டளை கதவணை, முத்தரசநல்லூர் பெட்ரகுலேட்டர், எலமனூர் மேலணை, கல்லணை அடுத்து மாயவரம் வரை தண்ணீர் ஆக.3-ம்தேதிக்குள் சென்றடைவது கஷ்டம். இதனால் 50 முதல் 160 மைல் தொலைவிற்கு வலது, இடது கரைகளில் நிலத்தடி நீரை செறிவூட்டிக் கொண்டு காவிரி நீர் செல்ல வேண்டியுள்ள நிலை தற்போதுள்ளதால், காவிரியில் தண்ணீரை 5,000 கன அடிக்கு திறக்க மாவட்ட நிர்வாகம், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.