இந்த சாயப்பட்டறைகளில் இருந்தும், ஏற்கனவே அதிகாரிகளால் மூடப்பட்ட பட்டறைகளில் இருந்தும் இரவு நேரங்களில் சாயக்கழிவுகளை வாய்க்கால் மற்றும் ஆறுகளில் கலக்க விடுவதாக சமீபகாலமாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை கரூர் பழைய அமராவதி ஆற்று பாலத்தின் கீழ் உள்ள ராஜவாய்க்காலில் சாயக்கழிவு கலப்பதாக மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின் செயலாளர் ராமலிங்கத்துக்கு தகவல் கிடைத்ததின்பேரில் விவசாயிகள் சென்று பார்வையிட்டனர். மேலும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சேரலாதனுக்கும் தகவல் கொடுத்ததையடுத்து அவரும் சென்று பார்வையிட்டு, தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.