மதுரையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்ளிட்ட 3 பேர் கைது
மதுரை தல்லாகுளம் காவல் ஆய்வாளர் மோகன் நேற்று இரவு முல்லை நகர் பகுதியில் ரோந்து சென்றபோது, கணேசன் என்பவர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தாராம். அப்போது, அவரிடம் மேற்கொண்ட


மதுரை தல்லாகுளம் காவல் ஆய்வாளர் மோகன் நேற்று இரவு முல்லை நகர் பகுதியில் ரோந்து சென்றபோது, கணேசன் என்பவர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தாராம். அப்போது, அவரிடம் மேற்கொண்ட சோதனையில், அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அவர் கொடுத்த தகவலில் கோமதிபுரம் பகுதியைச் சேர்ந்த பாக்கியம் என்ற பாக்கிய லட்சுமி மற்றும் தீர்த்தக்காடு பகுதியைச் சேந்த சதீஷ் என்பவர் வீட்டில் சோதனையிடப்பட்ட போது அவரிடம் 90 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மூவரிடமும் சேர்த்து 100 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர். அவர்கள் பயன்படுத்திய வாகனம் உள்ளிட்டவை கைப்பற்றட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...