திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கையை திருடியவர் கைது
திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் சமர்பிக்கும் உண்டியல் காணிக்கையில் வசூலான ரூ1 முதல் ரூ50 வரையிலான நோட்டுகளை தனியாக பிரித்து திருப்பதியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில்


திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கையை திருடியவர் செவ்வாய்க்கிழமை போலீசாரல் கைது செய்யப்பட்டார்.
திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் சமர்பிக்கும் உண்டியல் காணிக்கையில் வசூலான ரூ1 முதல் ரூ50 வரையிலான நோட்டுகளை தனியாக பிரித்து திருப்பதியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் வரவு வைப்பது வழக்கம். அதை தேவஸ்தானத்திடமிருந்து மாதந்தோறும் பெற்று செல்ல வங்கியில் உள்ள ஒப்பந்த ஊழியர்கள் திருமலைக்கு வருவர். செவ்வாய்க்கிழமை அதை கொண்டு செல்ல வந்த வங்கி ஊழியர்களில் குருஸ்வாமிநாயுடு(55) ரூ1000 நோட்டை எடுத்து தன் வேட்டியில் கண்காணிப்பு கேமராவை மறைத்து திருடி வைத்துக்கொண்டார்.
பரக்காமணி பிரிவிலிருந்து வெளியில் வந்த பின் நடந்த சோதனையில் தேவஸ்தான ஊழியர்கள், திருடிய பணத்தை கண்டு பிடித்தனர். பின் அவரை விசாரணைக்காக திருமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...