தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பொங்கல் விழாவில் கோஷ்டி மோதல்: 5 பேர் காயம்

கரூர் அருகே உள்ள லாலாப்பேட்டை மேலவேட்டுக்கட்டியில் புதன்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் விளையாட்டுப்போட்டிகள்

Updated On :16 ஜனவரி 2014, 9:43 am

கரூர் அருகே பொங்கல் விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேர் காயமடைந்தனர்.

கரூர் அருகே உள்ள லாலாப்பேட்டை மேலவேட்டுக்கட்டியில் புதன்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை அதே பகுதியைச் சேர்ந்த அசோக்குமாரின் மகன்கள் பிரேம் ஆனந்த்(24), தேவ்ஆனந்த், கவுதம் ஆனந்த் மற்றும் ராமு மகன் சரவணன், சத்தியசீலன், விஜயராகவன், பிரகாஷ் உள்ளிட்டோர் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த அதே பகுதியைச்சேர்ந்த மற்றொரு சரவணன்(24), சங்கர்(29), கீழசிந்திலவாடியைச் சேர்ந்த ராஜசேகர்(23) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் கோஷ்டியாக மோதிக்கொண்டனர்.

இச்சம்பவத்தில் காயம் அடைந்த சரவணன், சங்கர், ராஜசேகர், பிரேம் ஆனந்த்,விஜயராகவன் ஆகியோர் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்த புகாரின்பேரில் இருதரப்பினரையும் சேர்ந்த அனைவரும் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தேவ்ஆனந்த் மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.