இந்நிலையில் கடந்த ஜன.2ம் தேதி பாலியல் தொந்தரவு செய்ததாக மதுரை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தாராம். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரேசன் சம்பவம் நடந்த மாவட்ட காவல் துறைக்கு விசாகக் குழு மூலம் விசாரித்து அறிக்கையை அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சூலக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய வளாக அறையில் விசாகக் குழுவைச் சேர்ந்த உதவி காவல் கண்காணிப்பாளர் சியமளாதேவி, காவல் ஆய்வாளர் விஜயா, விருட்சம் மகளிர் முன்னேற்ற களஞ்சிய அமைப்பின் செயலாளர் கே.விஜயா, மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சங்கரேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேர்முக உதவியாளர் பத்மாவதி உள்ளிட்டோர் பூட்டிய அறையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மனுவின் அடிப்படையில் விசாரித்தனர்.