விருதுநகர் அருகே உள்ளது சங்கரலிங்காபுரம் கிராமம். இங்கு பாண்டியன் கிராம வங்கியின் கிளை தனியார் வளாகத்தில் இயங்கி வருகிறது. இதில், பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கணக்கு வைத்து பணத்தை சேமித்து வைத்துள்ளனர். இங்கு வழக்கம் போல் கடந்த சனிக்கிழமை வங்கியின் வேலை நேரம் முடிந்ததும் பணியாளர்கள் பூட்டி விட்டுச் சென்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் வழக்கம் போல் பணிக்கு திரும்பியுள்ளனர். அப்போது, வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.