விருதுநகரில் சிவகாசி சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீசொக்கநாதர் திருக்கோயில், பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள வாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், வெயிலுகந்தம்மன் திருக்கோயில், பராசக்தி மாரியம்மான் திருக்கோயில், ரயில்வே காலனி மாரியம்மன் திருக்கோயில், என்.ஜி.ஓ. விநாயகர் திருக்கோயில், ரயில்வே பீடர் சாலையில் உள்ள ராமர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் புத்தாாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிகாலையிலேயே எழுந்து புத்தாடைகள் அணிந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.