தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஏற்படவும், அனைத்து சமுதாய மக்களும் நல்ல நிலையில் வாழவும், தமிழகம் சிறப்பான நிலையை அடையவும் பாமக ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும். பாமகவின் கொள்கைகளை கிராம மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது இளைஞர்களின் பொறுப்பு. கடலூர் தொகுதியில் பாமக வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்றார்.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க வேட்பாளர் இரா. கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாநில துணைப்பொதுச்செயலர்கள் பழ.தாமரைக்கண்ணன், திருஞானம், மாநிலத்துணைத் தலைவர் சண்முகம், மாவட்டச் செயலர்கள் தர்மலிங்கம், ஜெகன், செல்வகுமார், பாட்டாளி இளைஞர் சங்க மாநில துணை செயலாளர் சண்.முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.