/

மதுரை அவனியாபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் கொள்ளை: 20 சவரன் நகை திருட்டு

மதுரை அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த செல்வம். என்பவரது மனைவி லூர்து பேபி. 53. தனியாக வசித்து வந்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:25 am

ஜெயப்பாண்டி

மதுரை அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த செல்வம். என்பவரது மனைவி லூர்து பேபி. 53. தனியாக வசித்து வந்தார்.

கணவர் செல்லத்தின் மறைவுக்கு பின் கொடுக்கல் வாங்கல் தொழிலில் ஈடுபட்டு வந்த இவரை. 4 பேர் கொண்ட மர்ம கும்பல் இன்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்தி, 50 ஆயிரம் ரூபாய் பணம் , கழுத்தில் காதில் பீரோவில் இருந்த 20 பவுன் நகை எடுத்துக் கொண்டு சென்றனர்.

இதையடுத்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர். லூர்து பேபியை மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.