ஆம்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை கன்டெய்னர் லாரியில் மின்சார கம்பி சிக்கி அறுந்து விழுந்தது. மின்கம்பமும் சாய்ந்தது. இதில் பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இவ்வழியாக தான் பேர்ணாம்பட்டு, குடியாத்தம் ஊர்களுக்கு வாகனங்கள் செல்லும் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. மேலும் பல தோல் தொழிற்சாலைகளும் இப்பகுதியில் தான் அமைந்துள்ளது. அதனால் தோல் மற்றும் ஷூ தொழிற்சாலைகளுக்கு கன்டெய்னர் லாரி போன்ற கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்லும். துத்திப்பட்டு கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே சாலையின் குறுக்கே மின்சார கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது.
இதுகுறித்து மின்வாரியத்திற்கு பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் மின்வாரியம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பும் ஒரு லாரி அவ்வழியாக சென்றபோது மின்சார கம்பி அதில் சிக்கியுள்ளது. அப்பகுதி மக்கள் அதனை தூக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் ஞாயிர்றுக்கிழமையும் அதே போல கன்டெய்னர் லாரியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பி சிக்கியுள்ளது. அதை கவனிக்காத டிரைவர் லாரியை தொடர்ந்து இயக்கியுள்ளார். அதனால் மின்சார கம்பி அறுந்தது. அங்கிருந்த ஒரு மின்கம்பம் சாய்ந்தது. மின்சாரம் தடைப்பட்டதால் அவ்வழியாக சென்று கொண்டிருந்த பலர் உயிர் தப்பினர். மின்சாரம் தடைபடாமல் இருந்திருந்தால் உயர்சேதம் ஏற்பட்டிருக்கும்.
அதனால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து லாரியின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கியதில் லாரியின் கண்ணாடி உடைந்தது. மேலும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உமர்ஆபாத் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மின்சார வாரிய பணியாளர்கள் உடனடியாக அங்கு சென்று மின்சார வயரை இணைக்கும் பணியை மேற்கொண்டனர்.அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.40% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

