திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ராமநத்தம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து 3 பேர் பலி

ராமநத்தம் அருகே லாரி மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த 3 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:24 am

பெ. விஜயபாஸ்கர்

ராமநத்தம் அருகே லாரி மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த 3 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர்.

 திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற லாரி ஒட்டுநர், கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெங்கனூர் பஸ் நிறுத்தம் முன்பு உள்ள கடையில் வெள்ளிக்கிழமை காலை நிறுத்தி கடையில் டீ குடித்துவிட்டு லாரியை எடுத்துள்ளார்.

 அப்போது பின்னால் கார் வருவதை கவனிக்காமல் லாரி ஓட்டுநர் திடீரென லாரியை சாலையின் மையப்பகுகிக்கு ஓட்டியுள்ளார். இதில் பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். காரில் பயணம் செய்தவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. 

இதுகுறித்து வேப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.