பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

லாரி ஓட்டுநரைக் கட்டிப் போட்டு கண்டெய்னர் லாரி கடத்தல்

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே லாரி ஓட்டுநரின் கண்கள் கைகளைக் கட்டிப்போட்டு, லாரியைக் கடத்திச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:20 am

ஏ. அருள்ராஜ்

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே லாரி ஓட்டுநரின் கண்கள் கைகளைக் கட்டிப்போட்டு, லாரியைக் கடத்திச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து அரியலூர் சிமிண்ட் நிறுவனத்துக்குச் சென்றது லாரி. இடையில் உறக்கம் வரவே, லாலாப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்திவிட்டு, ஓரத்தில் படுத்து உறங்கினார் ஓட்டுநர் முருகையா (29). இவர் திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில், அங்கே வந்த மர்ம நபர்கள் 4 பேர்,. அவரின் கண்கள் கைகளைக் கட்டி, லாரியை கடத்திச் சென்றனராம். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், லாலாப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.