பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

ராஜபாளையம் அருகே குழந்தையுடன் தாய் மாயம் கணவர் புகார்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரைச் சேர்ந்த மாயக்கண்ணனின் மனைவி காமலட்சுமி(32). இவர் கடந்த 25-ம் தேதி தனது வீட்டிலிருந்து ஒன்றைரை வயது குழந்தை

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:48 am

எஸ். பாண்டியன்

ராஜபாளையம் அருகே தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் மாயமான சம்பவம் தொடர்பாக சேத்தூர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரைச் சேர்ந்த மாயக்கண்ணனின் மனைவி காமலட்சுமி(32). இவர் கடந்த 25-ம் தேதி தனது வீட்டிலிருந்து ஒன்றைரை வயது குழந்தை மகாலட்சுமியுடன் கடைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றாராம். அதையடுத்து நீண்டநேரமாகியும் வீடு  திரும்பிவில்லையாம். இதனால் கவலையடைந்த கணவர் மாயக்கண்ணன் தனது உறவினர்களின் வீடுகளில் சென்று விசாரித்துள்ளார். ஆனால், தனது மனைவி எங்கிருக்கிறார் என்கிற விவரம் தெரியவில்லையாம். இதையடுத்து, செவ்வாய்கிழமை இரவு சேத்தூர் காவல் நிலையத்தில் மாயக்கண்ணன் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் மாயமான காமலட்சுமி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.