பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

விருதுநகர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சாவு

விருதுநகர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் செவ்வாய்கிழமை அதிகாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கைக்குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 5 பேர்கள் வரையில்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:48 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் செவ்வாய்கிழமை அதிகாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கைக்குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 5 பேர்கள் வரையில் படுகாயம் அடைந்தனர். இதில் வழிபாடு முடித்துக் கொண்டு ஊருக்கு திரும்பும் போது விபத்துச் சம்பவம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் சரவணன்(45). இவரது சகோதரர் பொன்ராஜ்(40). இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் காரில் திருநள்ளாறுக்கு வழிபாடு நடத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றார்களாம். அந்தக் காரில் பொன்ராஜ் மனைவி பிரியா(32), மகள் முத்து சவுமியா(6), 3 மாத கைக்குழந்தை பாலவிசாலி, சரவணன் மனைவி லட்சுமி(36), மகன்கள் முத்துக்குமரன்(17), பிருத்திவி தங்கம்(10) ஆகியோர் சென்றுள்ளனர். இக்காரை சரவணன் ஓட்டினாராம்.

இந்நிலையில் திருநள்ளாரில் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு கோவில்பட்டிக்கு இரவில் திரும்பினர். அப்போது, விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையில் ஆர்.ஆர்.நகர் அருகே அதிகாலையில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பயணம் செய்தவர்கள் கார் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ளவர்கள் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பொன்ராஜும், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது கைக்குழந்தை பாலவிசாலியும், அவரது மனைவி பிரியா மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் இடையிலேயே உயிரிழந்தனர்.

மேலும், இந்த விபத்தில் சரவணன், அவரது மனைவி லட்சுமி, மகன்கள் முத்துக்குமரன், பிருத்திவிதங்கம், பொன்ராஜின் மகள் முத்துசவுமியா ஆகியோரை படுகாயம் அடைந்த நிலையில் மீட்டு மதுரை தனியார் மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.