இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை பகுதிகளில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. ராஜபாளையத்தில் கடந்த 4 நாள்களுக்குள் 7 குழந்தைகளும், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா ஒரு குழந்தையும் உயிரிழந்துள்ளனர். ராஜபாளையம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.