கர்நாடகம், காவேரி மாவட்டத்தைச் சேர்ந்த சேசாகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தப்பா சீகல்மணி(47). இவர் உறவினர்களுடன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு வழிபாட்டு தலங்களுக்கு தனது வாகனத்தில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையே விருதுநகர் கச்சேரி சாலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு தங்கும் விடுதியில் அறை வாடகைக்கு எடுப்பதற்காக சென்றார்களாம். பின்னர் வெளியில் காரின் மேல் பகுதியில் வைத்திருந்த பைகளை எடுத்துச்செல்வதற்காக வெளியில் வந்துள்ளனர்.