தமிழகம் முழுவதும் நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மண்டல போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், விருதுநகர் மண்டலத்திலும் 11 தொழிற்சங்களைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஆகியோர் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது பல்வேறு 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 29-ம் தேதி முதல் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பினர் அறித்திருந்தனர். இந்நிலையில் ஒரு நாள் முன்னதாகவே ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.