ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டம் ஜக்கையாப்பேட்டையைச் சேர்ந்த ராமு(26) என்பவர், அங்குள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். வேலைக்குச் செல்லும் வழியில், பங்காருப்பேட்டையச் சேர்ந்த ரமணம்மா(24) என்பவர் அவருக்கு அறிமுகமானார். இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வராம். ஒருநாள் திடீரென ராமுவிடம் தான் அவரைக் காதலிப்பதாகக் கூறியுள்ளார் ரமணம்மா. ஆனால், தன் அத்தை மகளை தான் திருமணம் செய்யவிருப்பதாகவும், தான் ரமணம்மாவைக் காதலிக்கவில்லை என்றும் ராமு கூறியுள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த ரமணம்மா, தொடர்ந்து பலமுறை ராமுவை தன்னைக் காதலிக்குமாறும் திருமணம் செய்துகொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார்.