கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற கரூர் மாவட்ட அனைத்து தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டத்திற்கு போக்குவரத்துதுறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் வழக்குரைஞர் ராஜூ முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்று பேசியவர்கள், மக்களவை துணை சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள மு.தம்பிதுரைக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் புகளூரில் தடுப்பணை கட்டவும், திருச்சி-கரூர்-கோவை சாலையை அகலப்படுத்தவும், நொய்யல் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.