அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகரில் லாரி திருடிய சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது: 5 லாரிகள் பறிமுதல்

விருதுநகர் அருகே மூளிப்பட்டியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விருதுநகர்-சிவகாசி சாலையில் லாரி புக்கிங் அலுவலகத்திற்கு முன்பு சரக்கு ஏற்றுவதற்காக நிறுத்தி வைத்து கடைக்கு

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:08 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் லாரி திருடிய சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து 5 லாரிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் அருகே மூளிப்பட்டியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விருதுநகர்-சிவகாசி சாலையில் லாரி புக்கிங் அலுவலகத்திற்கு முன்பு சரக்கு ஏற்றுவதற்காக நிறுத்தி வைத்து கடைக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும் போது புக்கிங் அலுவலகத்திற்கு முன்பு நிறுத்தியிருந்த லாரி யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதேபோல், சிவகாசியில் ஜேசுராஜ் என்பவரது லாரி உள்ளிட்ட 4 லாரிகள் திருடு போனாது.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் உத்தரவின்பேரில் காணமல் போன லாரிகள் குறித்து விசாரணை செய்வதற்கு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விருதுநகர் மேற்கு காவல் நிலைய சார்புஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் 4 போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். அப்போது, லாரியுடன் காணமல் போன கைப்பேசியின் எண்ணை வைத்துபேசியதின் அடிப்படையில் திருடர்கள் திருச்சியில் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சி இந்திரா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த செந்தில்குமார்(26) போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது லாரி இருக்குமிடங்களை கண்காணித்து நண்பர்கள் உதவியுடன் திருடுவோம்.அதையடுத்து இயந்திர பாகங்களை பிரித்து, மற்றொரு லாரியின் பாகங்களை பொறுத்துவதும், வண்ணக்கலர் பூசி ஆவணங்கள் தயாரித்து விற்று வந்ததாகவும் தெரிவித்தாராம். அதன் அடிப்படையில் திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த செந்தில்குமார்(27), ஹூசைன்(64) மற்றும் எலியார்(54) ஆகியோரை மேற்குகாவல் நிலைய போலீஸார்  கைது செய்தனர். அதோடு, அவர்களிடம் இருந்த 5 லாரிகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.