இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சி இந்திரா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த செந்தில்குமார்(26) போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது லாரி இருக்குமிடங்களை கண்காணித்து நண்பர்கள் உதவியுடன் திருடுவோம்.அதையடுத்து இயந்திர பாகங்களை பிரித்து, மற்றொரு லாரியின் பாகங்களை பொறுத்துவதும், வண்ணக்கலர் பூசி ஆவணங்கள் தயாரித்து விற்று வந்ததாகவும் தெரிவித்தாராம். அதன் அடிப்படையில் திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த செந்தில்குமார்(27), ஹூசைன்(64) மற்றும் எலியார்(54) ஆகியோரை மேற்குகாவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அதோடு, அவர்களிடம் இருந்த 5 லாரிகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.