இந்நிலையில் புதன்கிழமை மாலை தனது தாய் பாத்திமாவுடன் காந்திகிராமத்திற்கு கணவர் வீட்டுக்கு வந்த யாஸ்மின்பானுவை தினகரன், அவரது தந்தை மோகன்தாஸ், தாய் ஆகியோர், ரூ.5 லட்சம் இருந்தால் உள்ளே வா ,இல்லையேல் வீட்டுக்குள் வரக்கூடாது என மிரட்டினார்களாம். இதனால் தினகரன் வீட்டின் முன்பே புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை வரை அங்கேயே தனது 4 மாதக்கைக்குழந்தை தம்ரின் மற்றும் இரண்டரை வயது மகன் தம்ஜித் ஆகியோருடன் உண்ணாமல் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து வருகிறார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பசுபதிபாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரிக்கச் சென்றபோது தினகரன் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனராம்.