அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் படுகாயம்

சாத்தூர் அருகே படந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(45).இவருக்கு  சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை விருதுநகர் அருகே ஆவுடையாபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு புதன்கிழமை காலையில்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:05 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் வேனிலிருந்து தீக்குச்சி மூட்டைகளை இறக்கும் போது உராய்வினால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.

சாத்தூர் அருகே படந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(45).இவருக்கு  சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை விருதுநகர் அருகே ஆவுடையாபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு புதன்கிழமை காலையில் தீப்பெட்டி ஆலையில் தயாரித்த செய்த தீக்குச்சி மூட்டைகளை வேனில் ஏற்றிபெட்டிகளில் அடைப்பதற்கு மற்றொரு பகுதியில் இருக்கும் பண்டல்கள் பேக்கிங்போடும் அறைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த மூட்டைகளை மன்னார்கோட்டையைச் சேர்ந்த ஆலைத் தொழிலாளி முத்தையா(42) இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.அப்போது, திக்குச்சிகளில் ஏற்பட்ட உராய்வினால் திடீர் விபத்து ஏற்பட்டது.இதில் உடனே சுதாரித்துக் கொண்ட தொழிலாளி முத்தையா வேனிலிருந்து கீழே குதித்த போது படுகாயம் அடைந்தார். அதையடுத்து, ஆலைக்குள் பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறி உயிர் தப்பினார்கள்.

பின்னர் இது குறித்து தொழிலாளர்கள் சாத்தூர் மற்றும் விருதுநகர்தீயனைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ ஆலை முழுவதும் மளமளவென பரவியது. இதில், தீக்குச்சி ஏற்றி வந்த வேன் மற்றும் அந்த அறையில் இருந்து தீக்குச்சி மூட்டைகள், தாயர் செய்யப்பட்ட பெட்டிகள் மற்றும் பண்டல்கள் ஆகியவைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த முத்தையாவை சிகிச்சைக்காக சாத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.