தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஆதித்தனார் கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் சந்திப்பு

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற பழைய மாணவர்கள் சந்தித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:04 am

கே.சுப்பிரமணியன்

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற பழைய மாணவர்கள் சந்தித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இக்கல்லூரியில் கடந்த 1987 முதல் 1990-ம் ஆண்டு வரை இயற்பியல் துறையில் பயின்ற மாணவர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆதித்தனார் கல்லூரி முதல்வர் முனைவர் வெ.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

கல்லூரி செயலர் இராமசேகரன் நிகழ்;ச்சியை துவக்கி வைத்தார். இதில் கல்லூரி பேராசிரியர்கள் டாக்டர் மாதவன், முனைவர்கள் தியாகராஜன், அண்ணாதுரை, பி.கே.கணேசன், மகேந்திரன், செல்வராஜ், சுயம்பு, ஆராய்ச்சி மாணவர் சாந்தி, கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் பரமசிவம், ஆய்வக உதவியாளர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணியன், பன்னீர்செல்வம்,

பழனிவேல் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை, பட்டதாரி ஆசிரியர்கள் கருணாகரன், அருமைநாயகம், பென்காம்துரை, சாய்செந்தில்நாதன், அண்ணாமலை தொடர்கல்வி நிலைய உதவியாளர் பெனடிக்

சைமன் பீற்றர், தனியார் நிறுவன மேலாளர்கள் ஜெயராஜ், ஆரோக்கியராஜ், தொழிலதிபர்கள் ஆனந்த ராகவன், ராம் லெட்சுமணன், கால்பிரேட் சற்குணம் உள்ளிட்டோர் தங்கள் பழைய கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் மாணவர் முனைவர்

சந்தணராஜ் வரவேற்புரையாற்றினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சுடலை, சந்தணராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.