அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகர் அருகே வெவ்வேறு விபத்துக்களில் 3 பேர் சாவு

விருதுநகர் அருகே சுந்தரலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் சூரைய்யா(32).இவர்   சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் உள்ள தனது தங்கையின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:04 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வெவ்வேறு விபத்துக்களில் இளைஞர்கள் 3 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

விருதுநகர் அருகே சுந்தரலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் சூரைய்யா(32).இவர்   சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் உள்ள தனது தங்கையின் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில் சென்றாராம். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பி வந்து கொண்டிருந்தாராம். அப்போது, அஜாக்கிரதையாகவும்,வேகமாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டி துளுக்கப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் உள்ள அர்ச்சனா ஆற்றுப் பால தடுப்புச் சுவரில் மோதியுள்ளார். அதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம். இது தொடர்பாக அவரது தங்கையின் கணவர் கணேசமூர்த்தி வச்சக்காரப்பட்டி காவல் நிலையில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு:

விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் முனியப்பன்(26). இவர் கட்டட வேலைகளுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பாண்டியன் நகர் அடுத்த முத்தால் நகரில் உள்ள தனியார் வீட்டில் திங்கள்கிழமை கட்டட வேலை நடந்துள்ளது. அதில், சென்ட்ரிங் அடைப்பதற்காக கம்பிகளை மேலே எடுத்துச் சென்றாராம். அப்போது, இரும்பு கம்பி மின்கம்பத்தின் வயர் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நின்றிருந்த கார் மீது லாரி மோதியதில் இளைஞர் சாவு:

ஈரோடு மாவட்டம், பங்களாப்புதூர் அருகே துரையம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(22). இவர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கோபியில் உள்ள தனியார் பாத்திரக்கடையில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு நண்பர்கள் குற்றாலத்திற்கு சுற்றுலாச் சென்றனர். அங்கு ப்குளித்து விட்டு திங்கள்கிழமை அதிகாலையில் திரும்பியுள்ளனர். விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது கார் பழுதானது. அதில், ஓட்டுநர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் மெக்கானிக்கை அழைப்பதற்காக ஊருக்குள் சென்றார்களாம். இதில்,திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் மட்டும் காரின் பின்சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, சாத்தூரில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த லாரி காரின் பின்புறமாக மோதியதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உயிரிழந்தாராம். இது தொடர்பாக துரையம்பாளையத்தைச் சேர்ந்த நண்பர் ராஜேந்திரன் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் விருதுநகர் அருகே துளுக்கப்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் பரமசிவம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.