விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டி, டி.சேடபட்டி மற்றும் குல்லூர்சந்தை ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, போலீஸார் திடீர் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி குறிப்பிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குறைகளை தெரிவித்த பின் குறிப்பிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 பேரை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பதற்கு அனுப்பி வைத்தனர்.