அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

அனைத்து அலுவலகங்களிலும் காலிப்பணியிடங்களை நிறைவேற்ற வேண்டும்: வணிக வரிப்பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

விருதுநகரில் தமிழ்நாடு வணிக வரிப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டட வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:03 am

எஸ். பாண்டியன்

அனைத்து அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு வணிக வரிப் பணியாளர் சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகரில் தமிழ்நாடு வணிக வரிப் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டட வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரா.பாலசுப்பிரமணியன் மாநில செயற்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் வணிக வரி பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் இச்சங்கத்தின் மாநில பொருளாளர் ஜெயராஜராஜேஸ்வரன் வரவு செலவு அறிக்கையை முன்வைத்தனர்.

இக்கூட்டத்தில் வணிக வரித்துறையில் அனைத்து நிலைகளிலும் 2014-ம்ஆண்டில் பதவி உயர்வு பட்டியலை வெளியிட வேண்டும். 7 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள மக்கள் கணக்கெடுப்புத் துறையில் இருந்து வந்த பதிவு எழுத்தர்களுக்கு உடனடியாக விதிமுறைகளை தளர்த்தி பதவி உயர்வு அளிக்கவேண்டும். இத்துறையில் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்.

துணை வணிக வரி அலுவலர் நேரடி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை காலதாமதம் இல்லாமல் உடனே நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.