அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகர் அதிமுக நகர செயலாளருக்கு கொலை மிரட்டல்

விருதுநகர் அதிமுகவின் நகரச் செயலாளராகவும், நகராட்சி உறுப்பினராகவும் பதவி வகித்து வருபவர் முகமது நயினார்(41). இவர் பழைய பேருந்து நிலையத்தில் கட்சி அலுவலகம் மற்றும் தேநீர் கடையும் நடத்தி

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:03 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அதிமுக செயலாளருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அதிமுகவின் நகரச் செயலாளராகவும், நகராட்சி உறுப்பினராகவும் பதவி வகித்து வருபவர் முகமது நயினார்(41). இவர் பழைய பேருந்து நிலையத்தில் கட்சி அலுவலகம் மற்றும் தேநீர் கடையும் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் மாவீரன் மோடி பாரத பிரதமராகிவிட்டார். அதனால் இந்துக்களை தவிர்த்து முஸ்லீம்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு வெளியேறுங்கள். இல்லையென்றால் இங்குள்ள இரண்டு பள்ளிவாசல்களையும் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம். நகர செயலாளராக முஸ்லீம் இருக்கக் கூடாது. உடனே பதவியை ராஜினமா செய்ய வேண்டும். இல்லையென்றால் கொலை செய்வோம் எனவும் இப்படிக்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ என அந்த மர்மக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நகர செயலாளர் முகமது நயினார் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.