அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதனால், அன்றைய நாளில் வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், விருதுநகர் மக்களவை தொகுதியைச் சேர்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரிடம் முன் அனுமதி சான்றிதழ் பெற்று, அவர்கள் பணிபுரியும் வாக்குச் சாவடி மையங்களிலேயே வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலன அலுவலர்கள் அதை விரும்பாமல், அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற்றனர்.