2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே மோதல் சம்பவம் தொடர்பாக 34 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில்   வீடு மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் 34 பேர் மீது வழக்கு பதிவு செய்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:06 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில்   வீடு மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் 34 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ளது புல்லலக்கோட்டை கிராமம். இங்கு ஒரு தரப்பைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் இறந்துவிட்டார். இந்த துக்க நிகழ்ச்சிக்காக மேளதாளம் மற்றும் ஒலிப்பெருக்கி அமைத்து பாட்டுக்கேற்க இறந்தவரின் உறவினர் மருது ஆடினாராம். அவருடன் மற்றொரு தரப்பைச் சேர்ந்த நண்பர் வேல்முருகனும் ஆடியதாக கூறப்படுகிறது. இதற்கு மருதுவின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளனர். இதையடுத்து இறுதி ஊர்வலம் சென்றனர். அப்போது, வேல்முருகன் கிராமத்தில் தகவலை தெரிவித்து 50-க்கும் மேற்பட்டோர் உருட்டு கட்டை மற்றும் கம்பு ஆகியவைகளுடன் ஒரு தரப்பினரின் தெருக்களில் புகுந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அதில், வீடு, வாகனங்களை அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு தரப்பைச் சேர்ந்த மாயகிருஷ்ணன்(34), சேது(42), கிருஷ்ணன்(34), ராஜூ(50), பாண்டியராஜன்(42), ஆறுமுகம்(29), குப்புசாமி(45), அன்னலெட்சுமி(30), வள்ளி(25) உள்ளிட்ட 20 காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் பாண்டியன் நகர் போலீஸாரிடம் புகார் செய்தார். அதன் பேரில் மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்களான வேல்முருகன், மாரீஸ்வரன், களக்காண்டி, பார்த்தசாரதி, சௌந்தரபாண்டியன், முனீஸ்வரன், முனியாண்டி உள்ளிட்ட 34 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தை அடுத்து கிராமத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.