கடலூர் பான்பரி மார்கெட் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காய்கறி, மளிகை, வாழைப் பழங்கள், பூ விற்பனை, மீன்கள் மற்றும் இறைச்சிக் கடைகளும் இங்கு உள்ளன.மார்க்கெட் பகுதியில் வழிந்தோடும் கழிவுநீர், தனி வாய்க்கால் வழியாக, ரயில்வே தண்டவாளங்களுக்கு கீழ் உள்ள பாலம் வழியாக, பிரதான வடிகாலுடன் இணைக்கப்பட்டு இருந்தது.ஆனால் அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டபோது, இந்தப் பாலம் வேறு இடத்தில் கட்டப்பட்டு விட்டதாகவும், இதனால் பான்பரி மார்க்கெட் பகுதியில் உள்ள கழவுநீர் பிரதான வாய்க்காலுக்குச் செல்ல முடியாமல், தடைபட்டுவிட்டதாக பான்பரி மார்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.