நாட்டின் 16வது மக்களவைத் தேர்தலில் 81 கோடியே 41 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இது உலக அதிசயம். இந்த தேசத்தை அழிப்போரின் கையில் கொடுக்கப் போகிறீர்களா, மக்களின் துயரை சிலுவைப்போல சுமந்து தீர்க்க நினைப்பவரின் கையில் கொடுக்கப் போகிறீர்களா, ஒரு நாட்டின் பிரதமருக்கு சிலை வைப்பதை பார்த்துள்ளோம், ஆனால் நாட்டின் பிரதமரே சிலையாக இருப்பது இந்தியாவில்தான். கருணாநிதிக்கு அழகிரி அரிவாளை தீட்டி விட்டார். அவர் தந்தையையா அல்லது சகோதரை வெட்டுகிறாரா என தெரியவில்லை. மொகலாயர் ஆட்சியில் ஒளரங்சீப்புக்கு ஏற்பட்ட கதி கருணாநிதிக்கு கிடைக்கப்போகிறது. நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. சத்ரபதி சிவாஜி, வெள்ளை ஏகாபத்தியத்தை எதிர்த்து சின்னமலைக்கும், பெரியமலைக்கும் இடையே போரிட்ட தீரன்சின்னலை, வேலுநாச்சியார் போன்ற வீரம் நிறைந்தவர்கள் பிறந்த மண்ணில் பாகிஸ்தான் வீரர்கள் நம்நாட்டின் வீரர்கள் தலையை கொய்தபோது கைக்கட்டி பார்த்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு இந்த காங்கிரஸ் அரசு. வங்க தேசத்துக்கே விடுதலை வாங்கிக்கொடுத்தது இந்தியா. அந்த வீரம் எங்கே போச்சு.