ஆம்பூரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒரேயொரு நிமிடம் பேசியதால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.
வேலூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் இளஞ்செழியனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆம்பூருக்கு புதன்கிழமை வருகை தந்தார். ஆம்பூர் பைபாஸ் சாலையில் திறந்தவெளி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. மேடைக்கு காலை சுமார் 10.10 மணிக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வருகை தந்தார். முதலில் வேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி. ஞானசேகரன் பேசினார். அவர் சுமார் 15 நிமிடங்கள் பேசினார்.
திறந்த வெளி மேடையாக இருந்ததால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உணர்ந்தார். சி. ஞானசேகரன் பேசிய பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசத் தொடங்கினார். அனைவருக்கும் வணக்கம், நான் பேச நினத்ததையெல்லாம் ஞானசேகரன் பேசிவிட்டார். ஆகவே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறி ஒரே நிமிடத்தில் பேச்சை முடித்துக் கொண்டார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திமுக மற்றும் அதிமுகவிற்கு எதிராக எப்பொழுதும் பரபரப்பாக ஏதேனும் விமர்சனம் செய்து கொண்ட இருப்பார். அவருடைய பேச்சு எப்பொழுதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும். அதனால் அவருடைய பேச்சை கேட்க காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் ஒரே நிமிடம் மட்டுமே பேசியது தொண்டர்களை அதிருப்தி அடையச் செய்தது. பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
உடன் வேட்பாளர் விஜய் இளஞ்செழியன், வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராம்கோபால், முன்னாள் மாவட்ட தலைவர் பாலூர் சம்பத், மாவட்ட துணைத் தலைவர் கே. குப்புசாமி, ஆம்பூர் நகர தலைவர் எஸ். மாணிக்கம், நகரமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்பாபு, சுதாகர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.40% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


