சென்னை ஊர்க்காவல்படை வீரர் மதுரையில் நீரில் மூழ்கிச் சாவு
சென்னையைச் சேர்ந்த ஊர்க்காவல்படை வீரர் மதுரை அருகே கிணற்றில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார். சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (37). ஊர்க்காவல்படை வீரர். மதுரையில்


சென்னையைச் சேர்ந்த ஊர்க்காவல்படை வீரர் மதுரை அருகே கிணற்றில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (37). ஊர்க்காவல்படை வீரர். மதுரையில் ஊர்க்காவல்படை வெள்ளி விழாவை முன்னிட்டு நடந்துவரும் விளையாட்டு மற்றும் தனித்திறன் போட்டியில் பங்கேற்க வந்திருந்தார். அவருடம் நண்பர்கள் சிலரும் காரில் காஞ்சரம்பேட்டை பகுதிக்குச் சென்றனர். அங்கு தனியார் கிணற்றில் குளிக்க ஆசைப்பட்டு இறங்கியுள்ளனர். இதில் நீச்சல் தெரியாமல் முருகன் நீரில் மூழ்கியுள்ளார்.
அவரைக் காப்பாற்ற சக தோழர்கள் முயன்றும் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சென்று முருகன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முருகன் நீரில் மூழ்கி இறந்தது குறித்து சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த இடத்தில் சென்னை வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஊர்க்காவல் படையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...