மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஆம்பூரில் இரு வீடுகளில் பூட்டு உடைத்து திருட்டு :  35 சவரன் நகை திருட்டு

ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் அருகாமையில் உள்ள இரு தெருக்களில் இரு வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு 35 சவரன் தங்க நகை வெள்ளிக்கிழமை இரவு திருடப்பட்டுள்ளது.

Updated On :28 செப்டம்பர் 2013, 5:13 pm

ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் அருகாமையில் உள்ள இரு தெருக்களில் இரு வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு 35 சவரன் தங்க நகை வெள்ளிக்கிழமை இரவு திருடப்பட்டுள்ளது.

ஆம்பூர் பசவேஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (36).  இவருடைய தாய் ராஜேஸ்வரி (62).  இவர்கள் இருவர் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் உள்ள தன்னுடைய மற்றொரு மகன் வீட்டிற்கு ராஜேஸ்வரி சென்றுவிட்டார்.  ரஜினிகாந்த் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார்.  இவரும் தன்னுடைய பணி காரணமாக வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு வரவில்லை.  வீடு வெளியில் பூட்டப்பட்டிருந்தது.காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு திறந்திருந்துள்ளது.  உள்ள சென்றுபார்த்த போது அனைத்து அறைகளின் கதவுகளின் பூட்டு உடைத்து திறக்கப்பட்டு அறைக்குள் வைக்கப்பட்டிருந்த 5 பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  பீரோவுக்குள் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது.

மற்றொரு வீட்டிலிரும் திருட்டு :

35 சவரன் நகை திருட்டு போன தெருவிற்கு பக்கத்தில் உள்ள கவரை தெருவில் வசிப்பவர் பார்வதியம்மாள் (60).  இவர் குடியாத்தத்தில் உள்ள தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு சனிக்கிழமை காலை வந்துள்ளார்.  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்தே இருந்துள்ளது.  உள்ளேயிருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 30 கிராம் வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ.5 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவை திருடுபோயிருந்தது.

தகவலின் பேரில் ஆம்பூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.